டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!
நாமக்கல் : தன்னிடம் டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வீட்டை விட்டு ஓடி விட்டார் ஆசிரியர் ஒருவர். இதனால் நாமக்கல் மாவட்டம் வெப்படைகிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ நாராயணன். 32 வயதான இவர், வெப்படை கிராமத்தில் தங்கியிருந்தார். அங்கு பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்து வந்தார்.
இவரிடம் ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியின் மனைவி மலர்விழி என்ற 29 வயதுப் பெண் தனது குழந்தைகளை டியூஷன் சேர்த்து விட்டார். தினசரி மாலையில் டியூஷனுக்குக் குழந்தைகளை அழைதது வருவார் மலர்விழி.
தினசரி வந்தபோது மலர்விழிக்கும், ராஜ நாராயணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாகி விட்டது. இந்த நிலையில் மலர்விழியையும் காணவில்லை, ராஜ நாராயணனையும் காணவில்லை.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார் சுப்பிரமணி. போலீஸார் இந்த கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications