வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் தேமுதிக எம்.எல்.ஏ. உள்பட 10 பேர் காயம்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப் போனபோது மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் தேமுதிக எம்.எல்.ஏ. பாபு முருகவேல் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
ஆரணி ஒன்றியத்தில் தேமுதிக எம்எல்ஏ பாபுமுருகவேல் கடந்த 2 நாள்களாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை அவர் அக்ராபாளையம், அரியப்பாடி, மேலேரி, அடையபுலம், சேவூர், ரகுநாதபுரம் உள்ளிட்ட கிராம வாக்காளர்களுக்கு மினிவேனில் சென்று நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தார்.
அப்போது ரகுநாதபுரத்திலிருந்து வரும் வழியில் ரகுநாதபுரம் ஏரிக்கரையில் சென்றபோது திடீரென மினிவேன் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் எம்.எல்.ஏ. பாபுமுருகவேல் சிறுகாயத்துடன் தப்பினார். உடன் சென்ற அதிமுக பேரவை மாவட்ட செயலர் எஸ்.ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகி நாராயணசாமி, தேமுதிக ஒன்றிய அவைத்தலைவர் சி.எம்.ஆர். ரவிசங்கர், ஒன்றிய கவுன்சிலர் லோகநாதன், எம்எல்ஏ உதவியாளர் ராம்சங்கர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த திடீர் விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications