2ஜி: நாடாளுமன்ற குழு முன் சிஏஜி வினோத் ராய் ஆஜர்-ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு குறித்து விளக்கம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தகவல் வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்தே இந்த விவகாரத்தில் விசாரணை சூடு பிடித்தது. இதனால் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா பதவி விலக நேரிட்டது.
இந்த ஊழல குறித்து சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப்பிரிவு, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு ஆகியவையும் விசாரணை நடத்தி வருகின்றன.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக இது குறித்து நாடாளுமன்றத்தின் அரு அவைகளைச் சேர்ந்த எம்பிக்கள் அடங்கிய கூட்டுக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த குழுவுக்கு முன்பு பாஜக எம்பி முரளி மனோகர் ஜோஷி தலைவராக இருந்து விசாரணை நடத்தினார். குழுவின் பிற உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமலேயே தானாகவே ஒரு அறிக்கை தயாரித்து சபாநாயகரிடம் தந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடு்த்து அவரது பதவிக் காலம் முடிந்தது. இப்போது காங்கிரஸ் கட்சி எம்.பி. சாக்கோ இந்தக் குழுவின் தலைவராக உள்ளனர்.
இந்தக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு வருமாறு மத்திய கணக்கு தணிக்கைத் துறை அதிகாரிக்கு கூட்டுக் குழு உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்று இன்று காலை கூட்டுக் குழு முன்பு மத்திய கணக்கு தணிக்கைத்துறை தலைவர் வினோத் ராய் ஆஜரானார்.
அவரிடம், கூட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, எந்த அடிப் படையில் கணிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு வினோத் ராய் விளக்கம் அளித்தார்.
1998ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விதத்தை எடுத்துக் கூறிய அதிகாரி வினோத் ராய், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களையும் விளக்கமாகக் கூறியதாகத் தெரிகிறது.
முன்னதாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன்பும் ஆஜராகி ராய் விளக்கம் தந்துள்ளது நினைவுகூறத்தக்கது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications