அதிமுக அரசை விமர்சித்து தூத்துக்குடியில் மதிமுக போஸ்டர்
தூத்துக்குடி : அதிமுக அரசின் ஒரு வார கால ஆட்சியை கிண்டலடித்தும், விமர்சித்தும் மதிமுக பெயரில் தூத்துக்குடி மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் ஜோயல் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
அதிமுகவின் சர்வாதிகார போக்கு தொடங்கியுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்குள்ளாகவே, ஒரு சர்வாதிகார ஆட்சிதான் கொடுப்பேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு சட்டசபை இடமாற்றம், சமச்சீர் கல்வி ரத்து என்று ஆயிரக்கோடி ரூபாயான மக்களின் வரிப்பணத்தை இன்றைக்கு பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளோம் என்றார் அவர்.
அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ள வாசகம் வருமாறு:
அதிமுக அரசின் ஒரு வார சா(சோ)தனைகள்
சட்டசபை இடமாற்றம்
-ரூபாய் 1100 கோடி நஷ்டம்
சமச்சீர் கல்வி திட்டம் ரத்து
- ரூபாய் 500 கோடி இழப்பு
ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் கொள்ளை
-சட்டம், ஒழுங்கு-சந்தி சிரிப்பு
சட்ட, மேல்-சபை முடக்கம்
- சர்வாதிகார ஆட்சியின் துவக்கம்
இவ்வாறு அந்த போஸ்டரில் வாசகங்கள் உள்ளன. வைகோவின் படம் போட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டர்கள் கட்சி மேலிடத்தின் அனுமதியோடு வெளியிடப்பட்டதா அல்லது தன்னிச்சையாக வெளியிடப்பட்டதா என்பது தெரியவில்லை. இருப்பினும் போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது மதிமுக மேலிடம் நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications