பணிநிரந்தரம கோரும் டாஸ்மாக் ஊழியர்கள்
சென்னை: டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என சங்க தலைவர் சவுந்திரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் சவுந்திரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை:
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.
டாஸ்மாக் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, 'டாஸ்மாக் பணியாளர்களின் பணிநிரந்தரம் என்ற கோரிக்கை நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை' என்று இன்றைய முதல்வரின் அறிவிப்பு வேலை நிறுத்தப் பணியாளர்களுக்கு பெரிய நம்பிக்கையினை ஏற்படுத்தியது.
எனவே டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம் சம்பந்தமான நல்ல அறிவிப்பு, ஆளுநர் உரையில் அறிவிக்கப்படும் என 34 ஆயிரம் டாஸ்மாக் பணியாளர்களது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பினை தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்.
11.8.2010-ல் நடைபெற்ற டாஸ்மாக் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது சுமார் 300 டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் சங்கத் தலைவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்,"
என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications