முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணையை அனுமதிக்க மாட்டோம்-தமிழகம்

ஈரோடு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
கடந்த திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதி பெற்று இந்த முறைகேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும்.
மணல் விற்பனையை பொதுப்பணித் துறை நேரடியாகக் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் காரணமாக மணல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள் மணல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து முதல்வரின் ஆலோசனை பெறப்படும்.
முல்லைப் பெரியாறு பகுதியில் கேரளம் புதிதாக அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். இப்போதுள்ள அணையே பாதுகாப்பாக இருக்கிறது. புதிய அணை கட்டும் கேரளத்தின் முயற்சியை தொடர்ந்து எதிர்ப்போம் என்றார் அமைச்சர் ராமலிங்கம்.












Click it and Unblock the Notifications