தருமபுரி: நகராட்சித் தலைவரே எழுப்பிய தீண்டாமைச் சுவர்!

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தருமபுரி அருகே உள்ள தடங்கம் கொத்தடிமை காலனி செல்லும் பாதையை ஆக்கிரமித்து தருமபுரி நகராட்சி தலைவர் ஆனந்த குமார் ராஜா தீண்டாமை சுவர் எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியை சேர்ந்த இருளர் இன மக்கள் கடந்த 1981 ம் ஆண்டு ஆந்திராவுக்கு கல் உடைக்க சென்றனர். கொத்தடிமையாக இருந்த அவர்களை

தருமபுரி அருகே உள்ள தடங்கம் ஊராட்சியில் இருளர் கொத்தடிமை காலனி உருவாக்கப்பட்டு 400 க்கும் மேற்படட மக்கள் தொகுப்பு வீடு, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகள் பெற்று வசித்து வருகின்றனர்.

ஓசூரிலிருந்து அதியான் கோட்டைக்கு செல்லும் சாலையில் அமலா என்ற பள்ளி உள்ளது. அமலா பள்ளியை ஒட்டியே அரசு புறம்போக்கு சாலை ஒன்று உள்ளது.

இச் சாலை, இருளர் கொத்த டிமை காலனிக்கும் இக் காலனியை தாண்டி தடங்கம் இருளர் காலனிக்கும் செல்லும் வழியாகும். இவ்வழியை கடந்த மூன்று தலைமுறையாக பயன்படுத்தி வந்தனர்.

அமலாபள்ளி அருகில் காங்கிரஸ் கட்சியின் தருமபுரி நகராட்சி தலைவர் டி.சி.பி. ஆனந்தகுமார் ராஜாவுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் உள்ளது.

இருளர் கொத்தடிமை காலனி மக்களும் தடங்கம் இருளர் காலனி மக்களும் பயன்படுத்திவந்த பாதையை டி.சி.பி. ஆனந்தகுமார் ராஜா ஆக்கிரமித்தாக கூறப்படுகின்றது.

மேலும் சாலையின் நடுவே நடக்க முடியாதபடி குழியை வெட்டியும், பாதையின் குருக்கே கல்லை நட்டும், கொத்தடிமை காலனியை சுற்றி தீண்டாமைச் சுவர் எழுப்பியும் உள்ளார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் மட்டும் கொறட்டை விட்டு தூங்கி வழிகின்றது.

இதனைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மே 30 ம் தித இன்று தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு 'காதில் பூ சுற்றும்" ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+