தருமபுரி: நகராட்சித் தலைவரே எழுப்பிய தீண்டாமைச் சுவர்!
தருமபுரி: தருமபுரி அருகே உள்ள தடங்கம் கொத்தடிமை காலனி செல்லும் பாதையை ஆக்கிரமித்து தருமபுரி நகராட்சி தலைவர் ஆனந்த குமார் ராஜா தீண்டாமை சுவர் எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியை சேர்ந்த இருளர் இன மக்கள் கடந்த 1981 ம் ஆண்டு ஆந்திராவுக்கு கல் உடைக்க சென்றனர். கொத்தடிமையாக இருந்த அவர்களை
தருமபுரி அருகே உள்ள தடங்கம் ஊராட்சியில் இருளர் கொத்தடிமை காலனி உருவாக்கப்பட்டு 400 க்கும் மேற்படட மக்கள் தொகுப்பு வீடு, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகள் பெற்று வசித்து வருகின்றனர்.
ஓசூரிலிருந்து அதியான் கோட்டைக்கு செல்லும் சாலையில் அமலா என்ற பள்ளி உள்ளது. அமலா பள்ளியை ஒட்டியே அரசு புறம்போக்கு சாலை ஒன்று உள்ளது.
இச் சாலை, இருளர் கொத்த டிமை காலனிக்கும் இக் காலனியை தாண்டி தடங்கம் இருளர் காலனிக்கும் செல்லும் வழியாகும். இவ்வழியை கடந்த மூன்று தலைமுறையாக பயன்படுத்தி வந்தனர்.
அமலாபள்ளி அருகில் காங்கிரஸ் கட்சியின் தருமபுரி நகராட்சி தலைவர் டி.சி.பி. ஆனந்தகுமார் ராஜாவுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் உள்ளது.
இருளர் கொத்தடிமை காலனி மக்களும் தடங்கம் இருளர் காலனி மக்களும் பயன்படுத்திவந்த பாதையை டி.சி.பி. ஆனந்தகுமார் ராஜா ஆக்கிரமித்தாக கூறப்படுகின்றது.
மேலும் சாலையின் நடுவே நடக்க முடியாதபடி குழியை வெட்டியும், பாதையின் குருக்கே கல்லை நட்டும், கொத்தடிமை காலனியை சுற்றி தீண்டாமைச் சுவர் எழுப்பியும் உள்ளார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் மட்டும் கொறட்டை விட்டு தூங்கி வழிகின்றது.
இதனைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மே 30 ம் தித இன்று தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு 'காதில் பூ சுற்றும்" ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications