திமுகவினரின் ஊழலால் தான், காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது- யுவராஜா குற்றச்சாட்டு !

திண்டுக்கல்லில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, அவர் பேசியதாவது:
சட்டசபை தேர்தலில் எங்கள் கருத்துக்கள் மேலிடத்தில் எடுபடவில்லை. இளைஞர் காங்கிரசார் சொன்ன கருத்துக்களை டெல்லி கேட்டிருந்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்போம்.
முதல்வர், துணை முதல்வர் மீது எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அமைச்சர்கள் முதல் வார்டு உறுப்பினர் வரை இருந்த ஊழலால்தான் காங்கிரஸ் பலிகடா ஆக்கப்பட்டுள்ளது. இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தலைமையிடம் வற்புறுத்துவோம். இனி வரும் தேர்தலில்களில் வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும்.
இளைஞர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு ஆரம்ப கல்வி முதல் தமிழகத்தில் இந்தியை பாடமாக்க வேண்டும்.
கட்சியில் தற்போது ஒன்பது லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். வரும் காலங்களில் 30 லட்சம் உறுப்பினர்களாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications