ரவுடியைக் கொல்ல சரமாரி குண்டு வீச்சு-புதுச்சேரியில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி : புதுச்சேரியில் ரவுடி ஒருவரைக் கொல்ல ஒரு கும்பல் சரமாரியாக வெடிகுண்டுகளை வீசித் தாக்கியதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு நான்கு பேர் கொண்ட கும்பல் இன்று பிற்பகல் வந்தது. அந்தக் கும்பல் விடுதி மீது திடீரென நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசித் தாக்கியது.
இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓடினர். அந்த இடமே பெரும் பரபரப்பானது. அக்கம் பக்கத்து கடைகள் அடைக்கப்பட்டன. பின்னர் அந்தக் கும்பல் தப்பி ஓடி விட்டது.
அய்யனார் என்ற ரவுடி அந்த மதுபான விடுதியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரைக் கொல்லத்தான் இந்த குண்டு வீச்சு நடத்தப்பட்டதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
பட்டப் பகலில் நடந்த இந்த திடீர் தாக்குதலால் அப்பகுதியே பரபரப்பாகி விட்டது.












Click it and Unblock the Notifications