அஸ்ஸாம்: பாலத்திலிருந்து பஸ் ஆற்றில் விழுந்து 31 பேர் பலி
கெளஹாத்தி: அஸ்ஸாமில் நடந்த இரு வேறு விபத்துகளில் 37 பேர் பலியாயினர்.
தலைநகர் கெளஹாத்தியிலிருந்து ராங்கியா மாவட்டம் திகு என்ற இடத்துக்கு நேற்றிரவு திருமண கோஷ்டியினர் 40 பேர் பஸ்சில் சென்றனர். ஒரு மரப் பாலத்தை பஸ் கடக்க முயன்ற போது, அந்தப் பாலம் உடைந்ததில் பஸ் 40 அடி ஆழ குளத்தில் விழுந்து மூழ்கியது.
தகவல் கிடைத்ததும் போலீசாரும், ராணுவ வீரர்களும் விரைந்து வந்தனர்.
இரவு நேரம் என்பதால் பஸ்சை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. விடிய விடிய போராடி பஸ்சை மீட்டனர். இதில் 31 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் 12 பேர் பெண்கள்.
மணமகன், அவரது பெற்றோரும் விபத்தில் இறந்து விட்டனர், 6 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் நடந்த விபத்தில் 12 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல அஸ்ஸாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்கா அருகே பொக்காகட் எனும் பகுதியில் பஸ்சும்- ஆயில் டாங்கர் லாரியும் மோதிக் கொண்டன. இதில் எண்ணெய் லாரி கவிழ்ந்தது. தரையில் கொட்டிய எண்ணையை பொதுமக்கள் சேகரித்தபோது டேங்கர் திடீரென வெடித்து தீ பிடித்தது. இதில் 5 பேர் உடல் கருகி இறந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications