ராஜபக்சேவைக் கைது செய்யக் கோரி கோவையில் கையெழுத்து வேட்டை
கோவை: போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் கையெழுத்து வேட்டை நடைபெற்று வருகிறது.
இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து இன ஒழிப்பை நிகழ்த்திய போர்க்குற்றவாளி ராஜபக்சே போர்க்குற்றவாளி அன அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
ஐ.நா., சபையின் அறிக்கையை மதித்து, இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். ராஜபக்சேவை காப்பாற்ற இந்தியா முயற்சிக்க கூடாது. ஈழத்தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் (ஏ.ஐ.ஒய்.எப்.,) கோவை மாவட்டக்குழு சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
ஐ.நா.,வுக்கு அனுப்ப முடிவு
மாவட்டம் முழுவதும் கிளைகள் மூலமாக பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டு, அதை மாநிலக்குழு மூலம் ஐ.நா., சபைக்கு அனுப்பி வைப்போம் என இ.கம்யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கண்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications