ஆப்ரூவர் ஆகிறார் பல்வா?: ஜேபிசி குழுவிடம் வாக்குமூலம் அளிக்க விருப்பம்!

தற்போது கைதாகி திகார் சிறையில் உள்ள அவர், இது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கே நேரடியாக கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டால் இந்த விவகாரத்தில் மேலும் ஏராளமான உண்மைகள் வெளியில் வரலாம்.
சிபிஐயின் முதல் குற்றப் பத்திரிக்கையில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் சேர்த்து முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் பல்வா.
ராசாவுக்கு நெருக்கமாக இருந்த இவர், நாடு முழுவதும் 22 மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2ஜி லைசென்களில் 13 மண்டலங்களுக்கான லைசென்ஸை அடிமாட்டு விலைக்குப் பெற்றார். இதனால் நாட்டுக்கு 1.7 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தனது குற்றப் பத்திரிக்கையில் ராசாவுக்கு அடுத்த இடத்தில் இவரது பெயரைச் சேர்த்து சிபிஐ.
மேலும் இவர் தொடர்புடைய சினியுக் நிறுவனம் தான் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி நிதியுதவியும் வழங்கியது.
இந் நிலையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் ஆஜராக விரும்புவாதக் கூறியுள்ள பல்வா, இந்த வழக்கில் ஆப்ரூவர் ஆகவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications