லோக்பால் சட்டம்: 'வேண்டுமா?, வழங்கலாமா?'-முதல்வர்களிடம் 'ஐடியா' கேட்கும் மத்திய அரசு

பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்கள் ஊழல் செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர்களையும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அன்னா ஹசாரே தலைமையிலான சிவில் சொசைட்டி குழுவினருக்கும், லோக் பால் குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒருமனதான கருத்து எட்டப்படவில்லை.
இந் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில், லோக்பால் குழு நடத்திய ஆலோசனைகளில் ஒருமனதான முடிவு எட்டப்படவில்லை. அதே நேரத்தில் லோக்பால் மசோதா ஜூன் 30ம் தேதிக்குள் இறுதி செய்யப்படும். வரும் மழைக்கால கூட்டத் தொடரில் ஊழலுக்கு எதிரான கடுமையான லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும்.
அதே நேரத்தில் இந்த மசோதா தொடர்பாக 6 முக்கிய விஷயங்களில் மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தைக் கேட்டு லோக்பால் வரைவுக் குழு தலைவரும் மத்திய அமைச்சருமான பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், 1. ஊழலை விசாரிக்க அனைத்து மாநிலங்களிலும் லோக்அயுக்தா அமைக்கப்பட வேண்டுமா?, 2. லோக்பால் மசோதா விசாரணை வரம்பில் பிரதமரையும் கொண்டு வரலாமா?, 3. உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் விசாரிக்க அனுமதி வழங்கலாமா?, 4. நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் நடந்து கொள்வது (பேசுவது, வாக்களிப்பது உள்ளிட்டவை) ஆகியவற்றையும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரலாமா?, 5. சமூக சேவகர்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆகியோரையும் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரலாமா?, 6. லோக்பால் என்பதற்கு வரையறை என்ன? லோக்பாலுக்கு அனைத்து அதிகாரத்தையும் வழங்கிவிடுவதா அல்லது அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இந்த 6 விஷயங்களில் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு முதல்வர்களும், கட்சித் தலைவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
லோக்பால் வரைவுக் குழுவின் அடுத்த கூட்டம் ஜூன் 6ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு முதல்வர்களிடமும், கட்சித் தலைவர்களிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு சிதம்பரமும், கபில் சிபலும் கூறினர்.
இந் நிலையில் லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டதற்கு, இது குறித்து நான் கருத்துக் கூற வேண்டியதில்லை. இது எனது தனிப்பட்ட கருத்து தொடர்பான விஷயமும் இல்லை என்றார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications