லோக்பால் சட்டம்: 'வேண்டுமா?, வழங்கலாமா?'-முதல்வர்களிடம் 'ஐடியா' கேட்கும் மத்திய அரசு

பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்கள் ஊழல் செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர்களையும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அன்னா ஹசாரே தலைமையிலான சிவில் சொசைட்டி குழுவினருக்கும், லோக் பால் குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒருமனதான கருத்து எட்டப்படவில்லை.
இந் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில், லோக்பால் குழு நடத்திய ஆலோசனைகளில் ஒருமனதான முடிவு எட்டப்படவில்லை. அதே நேரத்தில் லோக்பால் மசோதா ஜூன் 30ம் தேதிக்குள் இறுதி செய்யப்படும். வரும் மழைக்கால கூட்டத் தொடரில் ஊழலுக்கு எதிரான கடுமையான லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும்.
அதே நேரத்தில் இந்த மசோதா தொடர்பாக 6 முக்கிய விஷயங்களில் மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தைக் கேட்டு லோக்பால் வரைவுக் குழு தலைவரும் மத்திய அமைச்சருமான பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், 1. ஊழலை விசாரிக்க அனைத்து மாநிலங்களிலும் லோக்அயுக்தா அமைக்கப்பட வேண்டுமா?, 2. லோக்பால் மசோதா விசாரணை வரம்பில் பிரதமரையும் கொண்டு வரலாமா?, 3. உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் விசாரிக்க அனுமதி வழங்கலாமா?, 4. நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் நடந்து கொள்வது (பேசுவது, வாக்களிப்பது உள்ளிட்டவை) ஆகியவற்றையும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரலாமா?, 5. சமூக சேவகர்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆகியோரையும் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரலாமா?, 6. லோக்பால் என்பதற்கு வரையறை என்ன? லோக்பாலுக்கு அனைத்து அதிகாரத்தையும் வழங்கிவிடுவதா அல்லது அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இந்த 6 விஷயங்களில் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு முதல்வர்களும், கட்சித் தலைவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
லோக்பால் வரைவுக் குழுவின் அடுத்த கூட்டம் ஜூன் 6ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு முதல்வர்களிடமும், கட்சித் தலைவர்களிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு சிதம்பரமும், கபில் சிபலும் கூறினர்.
இந் நிலையில் லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டதற்கு, இது குறித்து நான் கருத்துக் கூற வேண்டியதில்லை. இது எனது தனிப்பட்ட கருத்து தொடர்பான விஷயமும் இல்லை என்றார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications