டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்-பத்திரிகைக்கு தயாநிதி வக்கீல் நோட்டீஸ்

ஏர்செல் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல் தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சையே அமைத்துள்ளார். இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தமாக ரூ. 400 கோடி அளவுக்கு பிஎஸ்என்எல்லுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ கணக்கிட்டுள்ளதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இதையடுத்து இந்த புகார்களை மறுத்து தயாநிதி மாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பத்திரிக்கைச் செய்தியில் கூறியுள்ளது போல தான் முறைகேடு எதையும் செய்யவில்லை என்று விளக்கியுள்ளார்.
இதுபோன்ற அவதூறான செய்திகளை வெளியிட்டதற்காக நாளிதழ் மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 10 கோடி மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications