மகன் பிரிவை தாங்க முடியாத தாய், மகன் சமாதியில் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே மகன் இறந்த தூக்கத்தை தாங்க முடியாமல் அவரது சமாதியில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியர்குடியிருப்பை சேர்ந்தவர் மீன் வியாபாரி சேர்மத்துரை. இவரது மனைவி தங்ககனி. இவர்களது மகன் பிரபாகர். ஈரோட்டில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஊருக்கு வந்த பிரபாகர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

மகனை பறிகொடுத்த தங்ககனி அவன் சென்ற இடத்திற்கே தானும் சென்று விடுவேன் என்று புலம்பிய வண்ணம் இருந்தார். கணவர், உறவினர்கள் தேற்றியும் அவர் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

முன்தினம் மதியம் மண்ணெண்ணெய் கேனுடன் பிரபாகர் அடக்கம் செய்துள்ள தோட்டத்திற்கு தங்ககனி சென்றார். அங்கு மகன் சமாதியை கட்டி பிடித்து கதறி அழுதார்.

பின்னர் உடலில் மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் மீனாட்சி நாதன் மற்றும் போலீசார் அங்கு சென்று தங்ககனி உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+