மதுரை அருகே விசாரணைக் கைதி மர்ம மரணம்
Subscribe to Oneindia Tamil

மதுரை அருகே உள்ள ஊமச்சிகுளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மார்க்கண்டேயன். இவர் தனது மகளைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர் போலீஸார். இந்த நிலையில் மார்க்கண்டேயனை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் வைத்து விசாரித்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை மார்க்கண்டேயன் காவல் நிலைய லாக்கப்பில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக திடீரென போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது மார்க்கண்டேயன் குடும்பத்தினரை அதிர வைத்துள்ளது. போலீஸாரின் அடி உதையில்தான் மார்க்கண்டேயன் உயிரிழந்திருக்க வேண்டும் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த மர்ம மரணத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications