Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் தங்கை மகள் ரகசிய திருமணம்: பாதுகாப்பு கேட்டு மதுரை கமிஷனரிடம் தஞ்சம்

Subscribe to Oneindia Tamil

Suppaiya
நெல்லை: தமிழக சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையாவின் தங்கை மகேஸ்வரியின் மகள் தனது காதலனை மதுரையில் ரகசிய திருமணம் செய்தார். இந்த புதுமண ஜோடி பாதுகாப்பு கேட்டு மதுரை போலீஸ் கமிஷனரிடம் தஞ்சமடைந்தது.

தமிழக சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையாவின் தங்கை மகேஸ்வரி. இவர்
சென்னை அசோக்நகரில் இசக்கி சுப்பையா குடும்பத்துடன் வசிக்கிறார்.
மகேஸ்வரியும், அண்ணன் வீட்டிலேயே கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார். இவரது கணவர் திருமலைகுமார் கட்டட ஒப்பந்ததாரர் ஆவார்.

இவர்களது இளைய மகள் ராஜேஸ்வரி சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பி.இ. இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.

இவர் திருவொற்றியூர் இரும்பு வியாபாரி முருகேசனின் மகன் சுரேந்தரை காதலித்து வந்தார். சுரேந்தரும் அதே பல்கலைக்கழகத்தில் பி.இ. மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.

இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு
இரு குடும்பத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந் நிலையில் சுரேந்தர் ராஜேஸ்வரியுடன் மதுரை வந்தார். அங்கு தனது உறவினர், நண்பர் உதவியுடன் மாநகராட்சி பூங்கா முருகன் கோவிலில் திருமணம்
செய்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் தரப்பிலிருந்து பிரச்சனை வரும் என்று பயந்து பாதுகாப்பு கேட்டு மதுரை போலீஸ் கமிஷனர் சந்தீப் மிட்டலிடம் தஞ்சமடைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+