குற்றாலத்தில் குளித்து விட்டு திரும்பிய ஆட்டோ மீதுகார் மோதல் 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Tenkasi Accident
குற்றாலம்: குற்றாலத்தில் குளித்து விட்டு ஆட்டோவில் திரும்பியவர்கள் மீது கார் மோதியதில்6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி வருவதால் நாடெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் குற்றால சீசனை அனுபவித்து விட்டு ஊர்களுக்கு திரும்பி சென்ற வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் தென்காசி கீழபறையடி தெருவை சேர்ந்த இளைஞர்கள் சுமார் 8 பேர் ஒரு ஆட்டோவிலும், சிலர் மோட்டார் சைக்கிளிலும் பழைய குற்றாலத்தில் குளித்து விட்டு மத்தளம்பாறை என்ற ஊர் வழியாக தென்காசி நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த அம்பாசிடர் கார் ஒன்று ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு ஆட்டோவில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 ஆக 6 பேர் பலியாகினர்.

இறந்தவர்கள் விபரம் வருமாறு, சண்முகதாஸ், செந்தில், ராஜாமணி, கதிரேசன், சுந்தர், கார்த்திக் ஆகியோர் பலியாகினர். இசக்கிதாஸ், ஐயப்பன் இருவர் படுகாயம் அடைந்து தீவிர சிகிக்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குற்றாலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் தென்காசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+