மகாத்மா காந்தி மட்டும் இருந்திருந்தால் கதறி அழுதிருப்பார்-ராம்தேவ்

ஹரித்வாரில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று மீண்டும் தொடங்கியுள்ளார் ராம்தேவ். இன்று முற்பகல் அவர் தனது ஆசிரமத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், உச்சநீதிமன்றம் இன்று ராம்லீலா மைதானத்தில் நடந்த அடக்குமுறை அராஜகத்தை தானாக முன்வந்து வழக்காக எடுத்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை நான் வரவேற்கிறேன்.
நான் ராம்லீலா மைதானத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது எனக்குப் பாதுகாப்பு அளித்த பெண்களுக்கும், எனக்குத் துணை நின்ற ஆதரவாளர்களுக்கும் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.
டெல்லி போலீஸார் அன்றைய தினம் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டனர். அடக்குமுறைகளை, வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர். மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொண்டனர்.
யாரையும் அடிக்கவில்லை என்று டெல்லி போலீஸார் பொய் சொல்கின்றனர். மக்களை அவர்கள் அடித்தார்கள். அவர்களின் தாக்குதலால் மக்கள் சிதறி ஓடினார்கள். அதில் பலர் காயமடைந்தனர். எங்களது ஆதரவாளர்கள் யாரும் வன்முறையைத் தூண்டவில்லை.
பெண்கள், குழந்தைகளை போலீஸார் அடித்ததை மகாத்மா காந்தி மட்டும் பார்த்திருந்தால் கதறி அழுதிருப்பார்.
மிகக் குறுகலான பந்தலுக்குக் கீழ் இருந்தவர்கள் மீது, தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசிய செயல் மிகவும் கொடூரமானது, கண்டனத்துக்குரியது, மனித உரிமையை மீறும் செயல்.
அப்பாவிப் பெண்களையும், குழந்தைகளையும் கொடூரமாக தாக்கியது போலீஸ். இதுதொடர்பாக டெல்லி போலீஸார் சொல்லும் விளக்கம் எல்லாம் பொய்யாகும்.
இந்த அரசை மக்கள் நாட்டுக்கு அம்பலப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் மக்கள் ஒன்று திரண்டு போராட முன்வர வேண்டும்.
ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் நிற்காது, ஓயாது. தொடர்ந்து போராடுவேன் என்றார் ராம்தேவ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications