தொமுசவை உருகுலைக்க முயற்சி: தலைவர் செ.குப்புசாமி புகார்
நாகர்கோவில்: தொமுசவை உருகுலைக்க சிலர் முயற்சிக்கின்றனர் என தொமுச பேரவை தலைவர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நாகர்கோவில் மண்டல பொதுக்குழு கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. இதற்கு மண்டல பொது செயலாளர் ஞானதாஸ் தலைமை வகித்தார். தலைவர் காமராஜ், பொருளாளர் சிவன்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் பேசுகையில்,
கடந்த திமுக ஆட்சி காலத்தில் மாற்று கட்சி சங்கங்களைச் சேர்ந்தவர்களையும் அரசு மதித்தது. இப்போது ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் இதர தொழிலாளர் வர்க்கத்தினரை நசுக்குகின்றனர். ஓய்வு பெற உள்ளவர்களையும் சிரமப்படுத்துகின்றனர். எந்த நெருக்கடிகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.
தமிழக தொமுச பேரவை தலைவர் குப்புசாமி பேசுகையில்,
அரசு போக்குவரத்து கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக தொமுச உருவெடுத்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு இது அமுலில் இருக்கும். சங்கத்தை உருகுலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனை எதிர்த்து போராட வேண்டும். போக்குவரத்து கழக தொழிலாளர்களின் அடிப்படை உரி்மைகளை பறிக்கும் நடவடிக்கைகளை நிர்வாகம் கைவிட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications