காஷ்மீரியுடன் தாலிபான் தலைவர் அமீர் அம்சாவும் கொல்லப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் பாகிஸ்தானின் தெற்கு வஜீரிஸ்தான் மாகாணத்தில் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதி இலியாஸ் காஷ்மீரி மட்டுமல்லாது தாலிபான் படைத்தளபதி அமீர் அம்சாவும் கொல்லப்பட்டுள்ளார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தெற்கு வஜீரிஸதான் பழங்குடியினப் பகுதியில், வானா நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள லாமான் கிராமத்தில் நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தின. இதில் பயங்கரவாதி இலியாஸ் காஷ்மீரி, தாலிபான் படைத்தளபதி அமீர் அம்சா உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 3 தீவிரவாதிகள் படுகாயம் அடைந்தனர்.

மறுநாள் காலையில் இறந்தவர்களின் உடல்கள் ஆப்பிள் தோட்டத்தில் கிடந்துள்ளது. அதை உள்ளூர் மக்கள் புதைத்துள்ளனர்.

வானாவைச் சோர்ந்த அமீர் அம்சா தாலிபான் இயக்கத்தில் முல்லா நசீர் தலைமையிலான படையின் தளபதியாக இருந்து வந்துள்ளார்.

முல்லா நசீருக்கும் அரசுக்கும் இடையே தொடர்பு உண்டு. பஞ்சாபி தாலிபான் வீரர்கள் முல்லா நசீர் கட்டுப்பாட்டில் உள்ள வானா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளி்ல் வசிப்பதாக நம்பப்படுகிறது.

அமெரிக்கா வரும் ஜூலை மாதத்திற்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது படைகளைத் திரும்பப்பெறுவதால் அதற்குள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை அழிக்குமாறு அந்நாட்டுக்கு கெடுவிதித்துள்ளது. அமெரிக்கா கொடுத்துள்ள பட்டியலில் காஷ்மீரி, முல்லா உமர், அய்மான் அல் ஜவாஹிரி, சிராஜுத்தீன் ஹக்கானி மற்றும் அதியா அப்துல் ரஹ்மான் ஆகியோர் பெயர்கள் உள்ளன.

இந்த தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க அமெரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டாக செயல்படுவதாகக் கூறப்படுகின்து.

கைபர் பழங்குடியினப் பகுதியில் இருந்து காஷ்மீரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அன்மையில் தான் வஜீரிஸ்தான் வந்ததாகக் கூறப்படுகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+