வீரபாண்டி ஆறுமுகம் மீது அதிமுக வக்கீல் கொலை மிரட்டல் புகார்

Subscribe to Oneindia Tamil

Veerapandi Arumugam
சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தனது பி.ஏ.வின் செல்போன் மூ்லமாக கொலை மிரட்டல் விடுப்பதாக அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன் காவல்துறை டிஜிபி ராமானுஜத்தை இன்று நேரில் சந்தித்துப் புகார் கொடுத்துள்ளார்.

இதனால் வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்குப் பதிவாகி அவர் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜெயலலிதா குறித்து அவதூறுப் பேச்சு

சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன் கொடுத்துள்ள புகார் மனுவில்,

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கடந்த 9.4.2011 அன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறான கருத்துக்களை கூறி உள்ளார். இது தொடர்பாக தேர்தல் கமிஷனிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. அதற்கான சி.டி. ஆதாரங்களும் உள்ளன.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

போன் மூலம் மிரட்டினார்

சேலத்தில் 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான் ஆஜராகி வாதாடி வருவதால் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவரது உதவியாளரின் செல்போனில் இருந்து பேசி என்னை மிரட்டினார். இது தொடர்பாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

இரண்டு புகார்களும் கடுமையானவை என்பதால் வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா, அவர் கைதாவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+