டெல்லி: ராம்தேவ் வெளியேற்றம் நியாயமானதுதான் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளது, இந்திரா காந்தி காலத்தில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி நாட்களை நினைவூட்டுவதாக உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
பிரதமரின் விளக்கம் குறித்து அவர் கூறுகையில், எமர்ஜென்சியை இந்திரா காந்தி பிரயோகித்தபோது, இதேபோலத்தான் அவர் பேசினார். எமர்ஜென்சியை அமல்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அதைத் தவிர வேறு வழியில்லை என்பதுதான் அப்போது இந்திரா காந்தி வாயிலிருந்து வந்த வார்த்தை. அதையே இப்போது மன்மோகன் சிங்கின் பேச்சும் பிரதிபலிக்கிறது.
நாம் மீண்டும் எமர்ஜென்சி காலத்தை நோக்கிப் போகிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது. பிரதமரின் பேச்சு பெரும் அதிர்ச்சி தருவதாக உள்ளது என்று பிரதமரின் பேச்சுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
Senior BJP leader Sushma Swaraj has said Prime Minister Manmohan Singh's statement on police action against Ramdev reminded her of Emergency days when similar language was used by the then rulers. "When emergency was imposed, similar language was used by the then rulers that 'emergency was unfortunate but there was no alternative'," Swaraj posted on micro-blogging site Twitter. "Are we back to the days of emergency?," she wondered while expressing her "shock" over the Prime Minister's statement.