ராம்தேவ் வெளியேற்றம் நியாயமா?-கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுப்பு!
டெல்லி: டெல்லியில் தனது ஆதரவாளர்களோடு உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை டெல்லி போலீஸார் வெளியேற்றிய விதம் சரியா என்பது குறித்து பதிலளிக்க அமெரிக்க அரசு மறுத்துள்ளது.
பாபா ராம்தேவ் உண்ணாவிரத இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது, உண்ணாவிரதம் இருந்தவர்களை கண்ணீர்ப் புகை குண்டுகளை பிரயோகித்து விரட்டியடித்தது உள்ளிட்டவற்றுக்காக டெல்லி காவல்துறையும், மத்திய அரசும் கடும் கணடனங்களை சம்பாதித்துள்ளன.
இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது அமெரிக்கா வரை சென்றுள்ளது. அங்கு அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டனர். ராம்தேவ் விவகாரத்தில் டெல்லி காவல்துறை மேற்கொண்ட நடைமுறைகள் நியாயமானவையா, இதில் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து கருத்து தெரிவிக்குமாறு டோனரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் இது இந்தியாவின் உள் விவகாரம். கருத்து தெரிவிக்க அமெரிக்கா விரும்பவில்லை என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications