சென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டெண்ணில் 75 புள்ளிகள் உயர்ந்தது.
இன்று காலை வர்த்தகம் 18,545.95 புள்ளிகளில் தொடங்கியது. இன்றைய நாளில் 75.51 புள்ளிகள் உயர்ந்து 18,495.62 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசிய பங்கு சந்தையான நிப்டி 15.3 புள்ளிகள் உயர்ந்து 5532.05 புள்ளிகளில் நிலைப்பெற்றது.
ஜிண்டல் ஸ்டீல்ஸ், ஆர்ஐஎல், மாருதி, சிப்லா, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் கைமாறின.
புளூ சிப் பங்குகளான ரிலையன்ஸ், இன்போஸிஸ் போன்றவற்றின் பங்குகள் இன்று முதலீட்டாளர்களால் அதிகம் வாங்கப்பட்டன.
ஏர்டெல், எச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, டாட்டா பவர், ஹீரோஹோண்டா டி.எல்.எப். ,பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று நஷ்டத்தைத் தந்தன.
இதர ஆசிய சந்தைகளிலும் இன்று ஏறுமுகம் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications