டெல்லி: இந்தியாவும், பாகிஸ்தானும் சேர்ந்து ஒரே ஆண்டில் 20 முதல் 30 அணுகுண்டுகளை உருவாக்கி தங்களது அணு ஆயுதப் பிரிவில் சேர்த்துள்ளதாக ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச அமைதி ஆய்வுக் கழகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த அந்த அமைப்பு இதுகுறித்து வெளியிட்டுள்ள தனது ஆண்டறிக்கையில், இரு நாடுகளும் அணு ஆயுதக் குவிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன. அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று தாக்கும் வகையிலான ஏவுகணைகள் குவிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
2010ம் ஆண்டில் இந்தியாவின் அணு ஆயுத எண்ணிக்கை 60 முதல் 80 ஆக இருந்தது. ஆனால் தற்போது இது 80 முதல் 110 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் பாகிஸ்தானும் தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 70 முதல் 90 என்பதிலிருந்து 90 முதல் 110 ஆக உயர்த்தியுள்ளது. தற்போது இரு நாடுகளின் அணு ஆயுத பலமும் சம அளவில் உள்ளன.
இரு நாடுகளுமே அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வககையிலான அதி நவீன ஏவுகணைகளை பெருமளவில் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
India and Pakistan have added 20-30 nuclear warheads in their arsenal in the past one year, a global think tank said today. In its latest yearbook, Stockholm International Peace Research Institute said the neighbours are continuing to develop new ballistic and cruise missile systems capable of delivering nuclear weapons. In 2010, the Indian nuclear arsenal had 60-80 nukes but they have increased to 80-110 warheads. On the same pattern, the Pakistani side also increased its warheads from 70-90 to 90-110 warheads in the same period, SIPRI said in a release.