ஒரே ஆண்டில் 30 குண்டுகளை குவித்துள்ளன இந்தியா, பாக்.-ஸ்வீடன் அமைப்பு

Subscribe to Oneindia Tamil

Indian Missiles
டெல்லி: இந்தியாவும், பாகிஸ்தானும் சேர்ந்து ஒரே ஆண்டில் 20 முதல் 30 அணுகுண்டுகளை உருவாக்கி தங்களது அணு ஆயுதப் பிரிவில் சேர்த்துள்ளதாக ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச அமைதி ஆய்வுக் கழகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த அந்த அமைப்பு இதுகுறித்து வெளியிட்டுள்ள தனது ஆண்டறிக்கையில், இரு நாடுகளும் அணு ஆயுதக் குவிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன. அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று தாக்கும் வகையிலான ஏவுகணைகள் குவிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

2010ம் ஆண்டில் இந்தியாவின் அணு ஆயுத எண்ணிக்கை 60 முதல் 80 ஆக இருந்தது. ஆனால் தற்போது இது 80 முதல் 110 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் பாகிஸ்தானும் தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 70 முதல் 90 என்பதிலிருந்து 90 முதல் 110 ஆக உயர்த்தியுள்ளது. தற்போது இரு நாடுகளின் அணு ஆயுத பலமும் சம அளவில் உள்ளன.

இரு நாடுகளுமே அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வககையிலான அதி நவீன ஏவுகணைகளை பெருமளவில் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+