சிபிஐ இயக்குநரை பேச விடாமல் தடுத்த டி.ஆர்.பாலு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக ஜேபிசி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்த சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங், தயாநிதி மாறன் பெயரைக் கூறியபோது அதைச் சொல்லக் கூடாது என்று கூறி திமுகவைச் சேர்ந்த ஜேபிசி உறுப்பினர் டி.ஆர்.பாலு தடுத்ததாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
டி.ஆர்.பாலுவின் இந்த குறுக்கீடால் சிபிஐ இயக்குநர் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று ஜேபிசி முன்பு சிபிஐ இயக்குநர் சிங் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது பாஜக ஆட்சிக்காலத்தில் இருந்த தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்கள் கடைப்பிடித்த கொள்கை உள்ளிட்டவற்றை அவர் கூறினார். அப்போது டி.ஆர்.பாலு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.
ஆனால் தயாநிதி மாறன் பெயரை சிங் கூறியபோது குறுக்கிட்டுள்ளார் பாலு என்று தெரிகிறது. தயாநிதி மாறன் பெயரை ஏன் இழுக்கிறீர்கள் என்று சற்று கோபத்துடன் கூறினாராம் பாலு.
இதனால் அங்கிருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த பார்வையுடன் பாலுவைப் பார்த்துள்ளனர். சிங்கும் கூட பாலுவின் இந்த குறுக்கீடால் சற்று அதிருப்தி அடைந்தாராம்.
ஆனால் இப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்று பின்னர் குழுத் தலைவர் பி.சி.சாக்கோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications