குஜராத்தில் பயங்கரம்-தூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி ஏறியதில் 18 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: அகமதாபாத் அருகே சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது அதி வேகமாக வந்த லாரி ஏறியதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பகோதரா ஹைவே என்ற நெடுஞ்சாலையில் இந்தப் பரிதாப சம்பவம் நடந்துள்ளது. நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் பதியாத் பீர் தர்கா என்ற புனிதத் தலத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். வழியில் அவர்கள் சாலையோரம் உள்ள பிளாட்பார்மில் அவர்கள் ஓய்வுக்காக படுத்துத் தூங்கினர்.
அப்போது படு வேகமாக வந்த லாரி ஒன்று திடீரென தாறுமாறாக ஓடி சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது ஏறியது. இதில் 18 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications