மோசடி வழக்கு: பிஷப் மாணிக்கம் துரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
கோவை: கோவை சி.எஸ்.ஐ. அறக்கட்டளையில் நடைபெற்ற ரூ. 3.5 கோடி மோசடி வழக்கில் பிஷப் மாணிக்கம் துரை உள்ளிட்ட 7 பேர் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மண்டல சி.எஸ்.ஐ. அறக்கட்டளை தலைவராக இருந்தவர் பிஷப் மாணிக்கம் துரை. இவர் அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ. 3.5 கோடி மோசடி செய்ததாக உறுப்பினர் பிரகாஷ் என்பவர் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்பு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் பிஷப் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் பெற்றார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் அறக்கட்டளை உறுப்பினர்கள் மூர்த்தி, சண்முகசுந்தரம், மனேசன் உள்பட 7 பேர் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும், கடந்த மாதம் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி சீனிவாசன் வரும் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அன்றைய தினம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிஷப் மாணிக்கம் துரை உள்ளி்ட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications