மோசடி வழக்கு: பிஷப் மாணிக்கம் துரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
கோவை: கோவை சி.எஸ்.ஐ. அறக்கட்டளையில் நடைபெற்ற ரூ. 3.5 கோடி மோசடி வழக்கில் பிஷப் மாணிக்கம் துரை உள்ளிட்ட 7 பேர் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மண்டல சி.எஸ்.ஐ. அறக்கட்டளை தலைவராக இருந்தவர் பிஷப் மாணிக்கம் துரை. இவர் அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ. 3.5 கோடி மோசடி செய்ததாக உறுப்பினர் பிரகாஷ் என்பவர் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்பு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் பிஷப் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் பெற்றார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் அறக்கட்டளை உறுப்பினர்கள் மூர்த்தி, சண்முகசுந்தரம், மனேசன் உள்பட 7 பேர் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும், கடந்த மாதம் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி சீனிவாசன் வரும் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அன்றைய தினம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிஷப் மாணிக்கம் துரை உள்ளி்ட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications