மோசடி வழக்கு: பிஷப் மாணிக்கம் துரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
கோவை: கோவை சி.எஸ்.ஐ. அறக்கட்டளையில் நடைபெற்ற ரூ. 3.5 கோடி மோசடி வழக்கில் பிஷப் மாணிக்கம் துரை உள்ளிட்ட 7 பேர் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மண்டல சி.எஸ்.ஐ. அறக்கட்டளை தலைவராக இருந்தவர் பிஷப் மாணிக்கம் துரை. இவர் அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ. 3.5 கோடி மோசடி செய்ததாக உறுப்பினர் பிரகாஷ் என்பவர் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்பு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் பிஷப் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் பெற்றார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் அறக்கட்டளை உறுப்பினர்கள் மூர்த்தி, சண்முகசுந்தரம், மனேசன் உள்பட 7 பேர் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும், கடந்த மாதம் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி சீனிவாசன் வரும் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அன்றைய தினம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிஷப் மாணிக்கம் துரை உள்ளி்ட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications