ராணா வழக்கின் தீர்ப்பால் நமக்குப் பின்னடைவு ஏற்படாது-இந்தியா
டெல்லி: தஹவூர் ராணாவுக்கு மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று அமெரிக்க கோர்ட் அளித்துள்ள தீர்ப்பால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை செயலாளர் யு.கே.பன்சால் தெரிவித்துள்ளார்.
ராணா தீர்ப்பால் இந்தியாவில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. மும்பை பயங்கரவாத செயலில் ராணாவுக்குத் தொடர்பில்லை என்று சிகாகோ கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் யு.கே.பன்சால் கூறுகையில், இதை பின்னடைவாக கருதவில்லை. பிற நாடுகளின் அரசுத் தரப்பு வாதங்கள், சாட்சியங்களை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை வைத்து நமது நாட்டு புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தொடருவார்கள்.
இந்த தீர்ப்பு குறித்து இந்திய அரசு முழுமையாக ஆராய்ந்து பார்த்து பின்னர் தனது கருத்தைத் தெரிவிக்கும் என்றார்.
இதற்கிடையே, ராணா வழக்கின் விசாரணை, ஹெட்லியின் சாட்சியம் ஆகியற்றின் மூலம் மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கும், லஷ்கர் இ தொய்பாவுக்கும் இடையிலான வலுவான தொடர்புகள் அம்பலமாகியுள்ளன. எனவே மும்பை சம்பவத்தில் தொடர்புடையவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசுத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
ராணா தீர்ப்பு குறித்து மும்பை தாக்குதல் சம்பவ வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கூறுகையில், இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications