ஜூலை 3-ம் தேதி நடக்கவிருந்த குரூப் 2 தேர்வு 30-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஜூலை 3-ம் தேதி நடைபெற இருந்த குரூப் 2 தேர்வு ஜூலை 30-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நிதித்துறை உதவிப் பிரிவு அலுவலர், வணிக வரித்துறை உதவி அலுவலர் உள்பட 4 ஆயிரத்து 329 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தேர்வில் தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை உதவி அலுவலர் போன்ற பணியிடங்கள் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் இவற்றையும் சேர்த்து தேர்வு நடைபெற உள்ளது.

இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜூலை 3-ம் தேதிக்கு பதில் ஜூலை 30-ம் தேதி தேர்வு நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

இதன்படி மேலும் 281 உதவி பிரிவு அலுவலர்கள், கருவூலங்கள் மற்றும் கணக்கு துறைகளில் 485 கணக்காளர்கள், ஊராட்சி வளர்ச்சி முகமை, பஞ்சாயத்து ராஜ் துறைகளில் ஆயிரத்து 600 உதவியாளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 366 பணியிடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 4 ஆயிரத்து 329 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கூடுதல் பணியிடங்களையும் சேர்த்து காலி பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தேர்விற்கு வரும் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+