ஜெயலலிதா வீட்டுக்குள் புக முயன்ற மன நலம் பாதித்த பெண்
சென்னை முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்குள் இரவில் ஒரு பெண் புக முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெண் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
நேற்று இரவு முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு ஒரு பெண் வந்தார். வந்தவர் நேராக வீட்டுக்குள் நுழைய முயன்றார். இதையடுத்து பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவர் தேனாம்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது பெயர் மேகலா என்றும் 21 வயதாவதாகவும், கணவர் தன்னைக் கைவிட்டு விட்டதாகவும், முதல்வரிடம் கூறினால் சேர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை காரணமாக வந்ததாகவும் கூறினார்.
அப்பெண்ணுக்கு மன நல பாதிப்பும் இருப்பதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர். விசாரணைக்குப் பின்னர் மேகலாவின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து அவரை வரவழைத்து பின்னர் மேகலாவை அவர்களிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் முதல்வர் வீட்டுப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications