டி.பி. ரியலிட்டியின் ரூ.214 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய சிபிஐ மும்முரம்!

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் பற்றி விசாரித்து வரும் சி.பி.ஐ. தாக்கல் செய்த 2-வது குற்றப்பத்திரிகையில், டி.பி. ரியலிட்டி நிறுவனத்தின் மூலம் குசேகான் ஹெல்த்தி மற்றும் சினியுக் நிறுவனம் ஆகியவற்றின் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி போய் சேர்ந்ததாக கூறப்பட்டு இருந்தது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் பெற்ற ஆதாயத்துக்காக இந்த பணம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் அந்த குற்றப் பத்திரிகையில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரின் பெயரும் இடம் பெற்று இருந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். டி.பி. ரியலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷாகித் உஸ்மான் பல்வா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார்.
ரூ 214 கோடிக்கு சொத்து பறிமுதல்
இந்த நிலையில், கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் ரூ.214 கோடி எங்கே போனது, அந்தத் தொகையை சிபிஐ ஏன் கைப்பற்றவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
எனவே, இந்த தொகைக்கு சமமான மதிப்புள்ள டி.பி. ரியலிட்டி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இருப்பதாகவும், இது தொடர்பாக அமலாக்கப் பிரிவுக்கு விரைவில் கடிதம் எழுத இருப்பதாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
சி.பி.ஐ. நிறுவனமே நேரடியாக சொத்துக்களை முடக்க முடியாது என்பதாலும், சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் வெளிநாட்டு பணம் விதிமுறை மீறல் சட்டத்தின்படி, அமலாக்கப் பிரிவுதான் அந்த நடவடிக்கையை எடுக்க முடியும் என்பதாலும் அந்த அமைப்புக்கு கடிதம் எழுத இருப்பதாக சி.பி.ஐ. கூறுகிறது.
-
பாஜக உள்ள வந்துரும்ங்க தோழர்.. சிபிஐக்கு 5 தொகுதியை தள்ளிவிட்ட திமுக! 2021ல் என்ன நடந்தது தெரியுமா? -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
டெல்லி புறப்பட்டார் செந்தில்பாலாஜி.. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நாளை ஆஜர்! கூடவே ராஜீவ் காந்தி -
சிபிஐ ஆபிசில் செந்தில் பாலாஜி! வாய் மூடிய ஊடகங்கள்! லைவ் கவரேஜ் இல்லையா? நாஞ்சில் சம்பத் சுருக்! -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார் -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி












Click it and Unblock the Notifications