ஊழல் ஒழிப்பு தொடர்பான அமைச்சர்கள் குழு ஆலோசனை-அழகிரி பங்கேற்பு-ப.சி, சிபல் ஆப்சென்ட்!
டெல்லி: ஊழல் ஒழிப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவின் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இருப்பினும் முக்கிய அமைச்சர்களான ப.சிதம்பரம், கபில் சிபல் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
ஊழலை ஒழிப்பது குறித்தும், அதில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்தும் அரசுக்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதில், ப.சிதம்பரம், சரத்பவார், ஏ.கே.அந்தோனி, எம்.வீரப்ப மொய்லி, கபில் சிபல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மு.க.அழகிரியும் இதில் ஒரு உறுப்பினராக உள்ளார்.
இக்குழுவின் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் சிதம்பரமும், கபில் சிபலும் வரவில்லை. இருவரும் லோக்பால் மசோதா தொடர்பான அன்னா ஹஸாரே குழுவினரின் புகார்களுக்கு விளக்கம் அளித்து செய்தியாளர்களிடம் விளக்கிக் கொண்டிருந்ததால் கூட்டத்திற்கு வர முடியவில்லையாம்.
விரைவில் அமைச்சர்கள் குழு 7 முக்கிய அம்சங்கள் குறித்து அரசுக்குத் தனது பரி்நதுரையை அளிக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications