உத்தரபுரத்தில் 144 தடை உத்தரவு நீடிப்பு
உத்தபுரம்: மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் இரு சமுகத்தினர் இடையே சாமி கும்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்து உத்தப்புரம் பகுதியில் 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
உத்தப்புரத்தில் இருசமூகத்தினர்களுக்கிடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு சமூகத்தினர் தங்களுக்குச் சொந்தமான முத்தாலம்மன் கோயிலில் சாமி கும்பிட முடிவு செய்தனர்.
இதற்கு மற்றொரு சமூகத்தினரும் நாங்களும் கோயில் வழிபாட்டில் கலந்து கொள்வோம் என அறிவித்தனர். இதனால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலை உருவானது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து எழுமலை இன்ஸ்பெக்டர் தினகரன் ஒரு அறிக்கை தயார் செய்து பேரையூர் தாசில்தார் மங்கலராமசுப்பிரமணிக்கு அனுப்பி வைத்தார்.
அதை படித்துப் பார்த்த தாசில்தார் உத்தபுரத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்து உத்தப்புரம் பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பித்தார்.
தடையுத்தரவுக்கான நாள் முடிந்ததைத் தொடர்ந்து, இந்த தடை உத்தரவை மேலும், 15 நாட்களுக்கு நீட்டித்து தாசில்தார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications