மதுரை மேயர் தேன்மொழி ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மதிச்சயம் வடக்கு தெருவில் திமுக இலக்கிய அணி செயலர் சுந்தரராஜன் என்பவர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இது தொடர்பாக கிரையம் பெற்றதாக ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேயர் மற்றும் கமிஷனருக்கும் புகார் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வக்கீல் ஜெயராம் என்பவர் மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜோசப்டேவிட், மனுதாரர் புகாரில் முகாந்திரம் இருப்பதாகவும், இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், நகரமைப்பு அலுவலர் முருகேசன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யக் கூடாது என முன்ஜாமின் கேட்டு மதுரை மேயர் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இது தொடார்பான ஆவணஙகளை போலீசார் தாக்கல் செய்யாததால் தான் வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications