For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்யாவில் பயங்கர விமான விபத்து-44 பேர் பலி

By Chakra
Google Oneindia Tamil News

Tupolev 134
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் நடந்த பயங்கர விமான விபத்தில் 44 பேர் பலியாயினர்.

பெட்ரோசவோட்ஸ்க் நகரில் கடும் பனி மூட்டத்துக்கு இடையே தரையிறங்க முயன்ற விமானம் ரன்வேக்கு முன்னதாகவே தரையில் மோதி வெடித்துச் சிதறியது. அதில் விமானத்தில் இருந்த 44 பேர் பலியாயினர். 10 வயது சிறுவன், ஒரு பெண் விமான சிப்பந்தி உள்ளிட்ட 8 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

விபத்து நடந்தபோது விமான நிலைய ரன்வேயில் பனி மூட்ட விளக்குகள் (fog lights) விளக்குகள் எரியவில்லை என்று தெரிகிறது. இதனால் தான் ரன்வே என்று நினைத்து அதற்கு 2 கி.மீ. தூரத்துக்கு முன்னதாகவே விமானிகள் விமானத்தை தரையில் இறக்கியதாகவும், இதையடுத்தே விமானம் தரையில் மோதி வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படுகறது.

விபத்துக்குள்ளான விமானம் சோவியத் தயாரிப்பான பழைய டி.யு.-134 ரக விமானமாகும். இது ரஷ்ஏர் ஏர்லைன்ஸ் நிறுவனத்ததுக்குச் சொந்தமானது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து பெட்ரோசவோட்ஸ்க் நகருக்கு வந்து கொண்டிருந்தது.

பின்லாந்து எல்லைக்கு அருகே உள்ள இந்த நகரில் கடும் பனிப் பொழிவு நிகழ்ந்து கொண்டுள்ளது. விமானம் ரன்வேக்கு 2 கி.மீ. முன்னதாகவே தரையைத் தொட்டதால் அது உடைந்து சிதறியுள்ளது.

வீடியோ காட்சிகள்

விமான நிலையத்துக்கு வெளியே உள்ள சாலை முழுவதும் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன.

English summary
A passenger jet crashed in heavy fog and burst into flames late Monday on a highway in north-western Russia, just short of a runway whose fog lights had failed, killing 44 people, officials said. Eight people survived the crash. The Tu-134 plane, belonging to the RusAir airline, was en route from Moscow to the city of Petrozavodsk
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X