3 வருட கியாரண்டியுடன் 9.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்-அரசு திட்டம்
சென்னை: 3 வருட உத்தரவாதத்துடன், தரமான லேப்டாப்களை 9.12 லட்சம் மாணவர்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எல்காட் நிர்வாக இயக்குநர் அதுல் ஆனந்த் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
தமிழக அரசின் இந்த பெரும் திட்டத்தில் முதல் கட்டமாக 9.12 லட்சம் இலவச லேப்டாப்புகள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அரசு பள்ளிக்கூடங்கள், அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த லேப்டாப்புகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. செப்டம்பர் 15ம் தேதி, அண்ணா பிறந்த நாளன்று இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தனது கையால் தொடங்கி வைக்கிறார்.
லேப்டாப்களை கொள்முதல் செய்வதற்காக சர்வதேச டெண்டர் விடப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்கள் விருப்பங்களைத் தெரிவித்தன. இதையடுத்து இதுதொடர்பான செயல் முறை விளக்கக் கூட்டம் நேற்று எல்காட் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
சோனி, விப்ரோ, எச்.சி.எல்., டெல், இன்டெல், சாம்சங் உள்பட 140 உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். தங்களது தயாரிப்புகளின் மாதிரிகளுடன் வந்திருந்த அவர்கள் அந்த லேப்டாப்கள் குறித்து விவரித்தனர்.
லேப்டாப் எப்படி இருக்க வேண்டும் என்பதை அதுல் ஆனந்த் விளக்கினார். நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை இணை செயலாளர் உமா மகேஸ்வரி, ஐ.ஐ.டி. பேராசிரியர் ஜெயப்பிரகாஷ், அண்ணா பல்கலைக்கழக இயக்குனர் ரைமன்ட் உத்தரியராஜ், நிக்' நிறுவனத்தின் அதிகாரிகள் மணிவண்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
லேப்டாப் தயாரிப்புக்கு பல்வேறு நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது.
அதன்படி, லேப்-டாப் சர்வதேச தரத்தில் இருத்தல் அவசியம். டெண்டர் கோரும் நிறுவனம் மாதத்திற்கு ஒரு லட்சம் லேப்-டாப்கள் தயாரிக்கும் திறன் கொண்ட தொழிற்சாலை வைத்திருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.70 கோடிக்கு மேல் இருக்க வேண்டும். லேப்-டாப்பில் தமிழ், ஆங்கிலம் சாப்ட்வேர் இடம்பெற வேண்டும். லேப்-டாப் 14 அங்குல திரையுடன், 2 கிலோ 700 கிராம் எடைக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
லேப்-டாப் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய வசதியாக தாலுகா அளவில் சர்வீஸ் மையங்கள் வைத்திருக்க வேண்டும். லேப்-டாப்பிற்கு 3 வருட உத்தரவாதமும், பேட்டரிக்கு ஒரு வருட உத்தரவாதமும் அளிக்க வேண்டும்.
2ஜிபி ரேம், 320 ஜிபி ஹார்ட் டிஸ்க், டிவிடி ரைட்டர் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும். டெண்டரில் பங்கேற்கும் அனைத்து நிறுவனங்களும் அரசு அறிவித்துள்ள அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய மாதிரி லேப்-டாப் ஒன்றை இந்த மாத இறுதிக்குள் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்பது அந்த நிபந்தனைகளாகும்.
ஜூலை 11ம் தேதி டெண்டர்கள் திறக்கப்படவுள்ளன. அன்று லேப்டாப் தயாரிக்க யாருக்கு அனுமதி தரப்படும் என்பது தெரிய வரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications