நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகரிக்கும் கொலைகள்- மக்கள் பீதி

முன்விரோதம், கட்டபஞ்சாயத்து, கள்ளக் காதல், தொழில் போட்டி என பல்வேறு காரணங்களால் கொலைகள் அரங்கேறுகின்றன. பழிக்கு பழி, சாதி உணர்வு மக்கள் மனதில் வேறுன்றி வி்ட்டதால் கொலையாளிகள் சிறைக்கு சென்று விட்டு ஜாமீனில் வரும் வரை காத்திருந்து பகையை தீர்த்து கொள்கின்றனர்.
ஒருவர் கொல்லப்பட்டால், அவரைக் கொன்றவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். இது இப்படியே தொடர் கதையாக மாறுவதால் கொலைகளுக்குப் பஞ்சமே இல்லாத நிலை ஏற்படுகிறது.
ஓசிக்கு பீடி தர மறுத்தவர் வெட்டிக் கொலை, கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் கொலை என அற்ப காரணங்களுக்காக கூட கொலை செய்யப்படுகிறார்கள்.
கடந்த இரு மாதத்தில் மட்டும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. மே 1ம் தேதி தூத்துக்குடி மாவட்ட திமுக துணை செயலாளர் ஏசி அருணா வாக்கிங் செல்லும்போது வெட்டி கொல்லப்பட்டார்.
கடந்த 9ம் தேதி கயத்தாறு அருகே செட்டிக்குறிச்சியில் அண்ணியுடன் கள்ள தொடர்பு வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டம்பாறை அருகே உள்ள செட்டியூரில் நடத்தை சந்தேகத்தில் பிரேமா என்பவரின் தலையில் கல்லை போட்டு அவரது கணவரே கொலை செய்தார்.
2ம் தேதி பாளையங்கோட்டை ரகுமத்நகரை சேர்ந்த ராமையா என்பவர் தாழையுத்தில் குடிபோதையில் ஒரு வீட்டு முன் படுத்திருந்தபோது கழுத்தில் மிதித்து கொல்லப்பட்டார்.
4ம் தேதி தாழையுத்து சாலுன் கடையில் வைத்து பாபு என்பவர் முன்விரோதம் காரணமாக கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். அதே நாளில் சங்கரன்கோவில் எழில் நகரை சேர்ந்த செல்லையா என்பவரது மனைவி அய்யம்மாள் நகைக்காக படுகொலை செய்யப்பட்டார்.
5ம் தேதி கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளத்தில் ஆட்டோ டிரைவர் மாரியப்பன் அடித்து கொல்லப்பட்டார். நெல்லை ரயில் நிலையத்தில் அல்வா வியாபாரம் செய்த பிச்சையா என்பவர் தொழில் போட்டி காரணமாக அருகன்குளத்தில் வைத்து வெட்டி சாய்க்கப்பட்டார்.
13ம் தேதி மானூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது கள்ளகாதலியால் தலையில் கல்லை தூக்கி போட்டு கொல்லப்பட்டார்.
வீரவநல்லூரில் நேற்று முன்தினம் இரவு திமுக நகர செயலாளர் ரத்தினவேல் பாண்டியன் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தை பொறுத்த வரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு அதிக கொலை நடந்துள்ளதாக புளளி விபரங்கள் கூறுகின்றன.
கொலைகளைத் தடுக்கவும் குற்றச் செயல்களைக் குறைக்கவும் காவல்துறை இரும்புக் கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications