ஜப்பானில் மீண்டும் கடும் நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி சீரழிந்து இன்னும் அந்த பேரழிவுகளில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் ஜப்பானில் இன்று மீண்டும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பசிபிக் கடலின் லரான்ஸ் தீவில் லவாட்டில் என்ற இடத்தை மையமாக கொண்டு இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 6.7 புள்ளிகளாகப் பதிவானது. இதில் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
இது சக்தி வாய்ந்த நில நடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சுனாமி அலைகள் ஏதும் உருவாகவில்லை.












Click it and Unblock the Notifications