போதையில் பெண்களிடம் எஸ்ஐ சில்மிஷம்-தப்பவிட்ட போலீசார்

நெல்லை புதிய பஸ் நிலையம் நேற்று வழக்கம்போல் பரபரப்பாக இயங்கியது. அப்போது தென்காசி பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் நடுவே இருந்த நாற்காலியில் 35 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஆக்கரமித்திருந்தார். அவர் நல்ல மப்பில் இருந்தார். ஆபாச சைகைகள் மூலம் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்து கொண்டிருந்தார். அருகில் இருந்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள ஊரை சேர்ந்த இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்தவர் திடீரென அப்பெண்ணை தொட்டு சில்மிஷம் செய்தார்.
இதனால் நிலைகுலைந்த அப்பெண் ஆத்திரத்தில் அவரை திட்டியதோடு அருகில் இருந்த புறக்காவல் நிலைய போலீசாரிடம் புகார் செய்தார்.
போலீசார் வருவதற்குள் அங்கிருந்த நழுவிய போதை ஆசாமி அடுத்த வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்த பாப்பாக்குடியை சேர்ந்த பெண்ணிடம் தனது கைவரிசையை காட்ட முயன்றார். அத்துடன் நில்லாமல் நெரிசலில் தழும்பி வழித்த பாபநாசம் பஸ்சில் முன்பக்கம் ஏறி பெண்களை இடித்து கொண்டு நின்றார். இதனால் பெண்கள் மிரண்டனர்.
அதற்குள் போலீசார் அவரை பிடித்து விட்டனர். தன்னை தள்ளிகொண்டு சென்ற போலீசாரிடம் அந்த தள்ளாட்ட பேர்வழி தானும் ஒரு காக்கிசட்டைகாரர் என்பதையும், சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பில் உள்ளதையும் போட்டுடைத்து விட்டார்.
அடுத்த விநாடி தோழமை உணர்வால் சுதாரித்து கொண்ட போலீசார் அவரை தப்ப விட்டனர். பொது இடத்தில் அநாகரீகமாகவும், அத்துமீறலாகவம் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை புறக்கணித்து விட்டு கண் எதிரே அவரை தப்பவிட்ட போலீசார் செயலால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த ஆசாமி வேட்டியை அவிழ்த்துவிட்டு அதை தரையில் இழுத்துக் கொண்டே நடந்து சென்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications