புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து நீதி விசாரணை-அரசு உத்தரவு

இதுதொடர்பான விசாரணை அறிக்கை 3 மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலக கட்டிடப் பணிகளுக்கு கூடுதலான செலவு, முறைகேடு காரணமாக அரசு கஜானாவுக்கு இழப்பு, இந்தப் பணிகளுக்கு சட்டப்பூர்வ அனுமதிகளும் மற்றும் ஒப்புதல்களும் பெறப்பட்டனவா?, காலதாமதம், கட்டுமானத்தில் குறைபாடு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இதை பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக கருதி, மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக அரசு கருதுகிறது. அந்த அடிப்படையில், ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.தங்கராஜ் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது.
புதிய தலைமை செயலக கட்டிடப் பணிக்கு கூடுதல் செலவு செய்யப்பட்டதா? அதில் நடந்த முறைகேடுகள் காரணமாக அரசு கஜானாவுக்கு இழப்பு ஏற்பட்டதா? கட்டுமானப் பணிகளுக்கு சட்டப்பூர்வமான அனைத்து அனுமதிகளும் மற்றும் ஒப்புதல்களும் பெறப்பட்டனவா? கட்டுமானத்தில் குறைபாடுகள் இருக்கிறதா? கட்டுமானப் பணியில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டதா? என்பது குறித்து இந்தக் குழு விசாரணை நடத்தும்.
மேலும், புதிய தலைமை செயலக கட்டுமானப் பணிகளில் அரசு அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார்களா? தவறு ஏதும் செய்தார்களா? என்றும் இந்த குழு விசாரிக்கும். இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க தகுந்த வழிமுறைகளை இந்த குழு பரிந்துரைக்கும். இந்தக் குழு 3 மாதங்களில் விசாரணை முடித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அரசு அமைந்ததும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபையை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியது. மேலும் புதிய தலைமைச் செயலகம் கட்டுமானப் பணிகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அரசு அறிவித்தது நினைவிருக்கலாம்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications