சமச்சீர் கல்வி குழுவில் தனியார் பள்ளி நிர்வாகிகளை சேர்த்திருப்பது கண்டிக்கத்தக்கது! - வைகோ
கடலூர்: கல்வியை வியாபாரமாகவே செய்யும் தனியார் பள்ளி முதலாளிகளை / வியாபாரிகளை சமச்சீர் கல்வி பாட திட்ட ஆய்வுக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், அரசியல் பழிவாங்கல் உணர்ச்சி காரணமாக சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்திருப்பது தவறு.
பாடத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்து சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கல்வியை வியாபாரமாகவே செய்யும் தனியார் பள்ளி அதிபர்கள் சமச்சீர் கல்வி பாட திட்ட ஆய்வுக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பது ஏற்புடையது அல்ல. கல்வியாளர்கள்தான் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும். கல்வி வியாபாரிகள் அல்ல. இது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
இவர்களிடமிருந்து என்ன மாதிரி பரிந்துரைகள் வரும் என்பது தெரிந்த ஒன்றுதான்," என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications