திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நகைக் குவியலா?-பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது பத்மநாபசுவாமி கோவில். புராதான சிறப்பு மிக்க இக்கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த கோவில் தற்போது வரை திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையின் கட்டுபாட்டின் கீழ் இருந்து வருகிறது.
இக்கோயிலில் 6 பாதாள அறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவறறில் விலை மதிப்பற்ற ரத்தினங்கள், தங்கக் குவியல்கள் உள்பட ஏராளமான ஆபரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் 2 அறைகள் 1875-ம் ஆண்டுக்கு பிறகு திறக்கப்படவில்லை.
இந்நிலையில் கோயில் பாதாள அறையில் உள்ள நகைகளை கணக்கெடுக்க வேண்டும் என்று திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் அய்யர் என்பவர் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் நகைகளை கணக்கெடுக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. சிவில் நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பையும் எதிர்த்து மன்னர் குடும்பம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் தீர்ப்பை உறுதி செய்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இருவர் முன்னிலையில் இன்று பாதாள அறைகள் திறந்து ஆய்வு செய்யப்பட்டன.
கேரள உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள் கிருஷ்ணன் மற்றும் ராஜன் முன்னிலையில் நான்கு அறைகள் திறக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
ஆய்வின்போது பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆய்வு முடிந்ததும் அதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications