வாஷிங்டனில் நடக்கும் அமெரிக்க- இந்திய பொருளாதார மாநாட்டில் பிரணாப் உரை
டெல்லி: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அமெரிக்காவில் நடக்கும் இந்திய-அமெரிக்க பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 3 நாள் சுற்றுபயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று வாஷிங்டனில் நடக்கும் இந்திய-அமெரிக்க பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பிரணாப் உரையாற்றுகிறார். இந்தியா-அமெரிக்கா இடையேயான பொருளாதாரம் மற்றும் நிதி உடன்பாடுகள் குறித்து நடக்கும் இந்த மாநாட்டில் அமெரி்க்க கருவூல செயலர் டிமோதி எப். கெய்த்னர் உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் இரு நாடுகளின் இடையேயான பொருளாதார மேம்பாடு பற்றி விவாதிக்கப்படுகிறது என்று இந்திய தொழில் கூட்டமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.
இரண்டு நாடுகளின் உள்கட்டமைப்பு நிதித் தேவைகள் குறித்தும், குறிப்பாக அரசு-தனியார் ஒப்பந்தங்கள், நிதித்துறையில் உள்ள தனியார் நிறுவனங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.
இந்த ஒரு நாள் மாநாட்டில் இந்திய பொருளாதாரம், இந்திய நிதிச் சந்தைகள் மற்றும் உள்கட்டமைப்பு முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்படவிருக்கிறது.
2010-11-ம் ஆண்டில் இந்தியா-அமெரி்ககா இடையேயான வர்த்தகம் 48 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரணாபுடன் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர், இங்கிலாந்துக்கான இந்திய தூதர் சின்ஹா, நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் கௌசிக் பாசு, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் சுபிர் கோகர்ன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications