ஈழத் தமிழர்களின் கவலைகள் அனைத்தும் நியாயமானவையே- மன்மோகன் சிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கையில் உள்ள தமிழர்களின் கவலைகள் சட்டப்பூர்வமானவை, நியாயமானவை. அவற்றை நிவர்த்தி செய்ய, நிரந்தர அரசியல் தீர்வு காண இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

நேற்று ஐந்து நாளிதழ்களின் ஆசிரியர்களுடன் சந்திப்பை மேற்கொண்டார் பிரதமர். அப்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் விளக்கினார். ஈழத் தமிழர் பிரச்சினை குறித்தும் பிரதமர் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகள் முற்றிலும் நியாயமானவை, சட்டப்பூர்வமானவை. அவற்றை சரி செய்ய இந்தியா தொடர்ந்து இலங்கையை வலியுறுத்தி வருகிறது. இலங்கையில் வசிக்கும் அனைத்து மக்களையும் சமமாக மதித்து உரிய தீர்வைக் காணுமாறு தொடர்ந்து இலங்கை அரசு நிர்ப்பந்தித்து வருகிறோம்.

இந்தப் பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனும் நான் பேசியுள்ளேன். இந்தப் பிரச்சினையின் முழு பரிமாணமும் ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும். இந்தப் பிரச்சினையில் அவர் எனக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார் என்றார் பிரதமர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+