ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரசபை கூட்ட அரங்கில் ஜெ. படம் வைக்கக் கோரி அதிமுக கவுன்சிலர் தர்னா
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரசபை கூட்ட அரங்கில் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர் மாதேஸ்வரன் தர்னாவில் ஈடுபட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபையின் நேற்று அவசரமாகக் கூடியது. இதற்கு துணை தலைவர் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பின்னர் அதிமுக கவுன்சிலர் மாதேஸ்வரன் நகரசபை கூட்ட அரங்கில் முதல்வரின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று கடந்த மாதம் ஆணையரை சந்தித்து வலியுறுத்ப்பட்டது. ஆனால் இன்னும் முதல்வர் புகைப்படம் வைக்கப்படவில்லை. முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைக் கொண்டு வந்து வைக்கும் வரை அரங்கைவிட்டு வெளியேற மாட்டேன் என்று கூறி அவர் தரையில் அமர்ந்து தர்னா செய்தார்.
மாதேஸ்வரனின் கோரிக்கைக்கு துணை தலைவரும், திமுகவினரும் ஆட்சேபம் தெரிவித்தனர். இது குறித்து எழுத்துப்பூர்வமாகக் கொடுத்தால் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் முத்துக்கண்ணு தெரிவித்தார்.
உடனே அதிமுக உறுப்பினர் சந்தானமூர்த்தி கோரிக்கையை மனுவாக எழுதி தனது கட்சி உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி ஆணையரிடம் கொடுத்தார். இதையடுத்து 30 நிமிடங்கள் கழித்து நகராட்சி அலுவலக மேலாளர் அறையில் இருந்த
முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை எடுத்து வந்து கூட்ட அரங்கில் வைத்தனர். அதன் பிறகு மாதேஸ்வரன் தர்னா போராட்டத்தை கைவிட்டார்.












Click it and Unblock the Notifications