மணல் கடத்தல்: மணல் குவாரியை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது
எட்டயபுரம்: எட்டயப்புரம் அருகே வைப்பாற்றில் உள்ள மணல் குவாரியை முற்றுகையி்ட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துககுடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா வைப்பாற்று அய்யன்ராஜபட்டியில் அரசு மணல் குவாரி உள்ளது. இது தூத்துக்குடி-விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இங்கு அரசு அனுமதித்ததை விட அதிகமாக மணல் அள்ளுவதால் தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்றும், அதனால் அதிகமாக மணல் அள்ளுவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறி நேற்று அய்யம்பட்டி கிராம மக்களும், சிபிஎம் கட்சியினரும் மணல் குவாரியை முற்றுக்கையிட்டனர்.
இதில் விருதுநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் பழனிகுமார், சாத்தூர் நகர செயலாளர் முத்து, தாலுகா துணை செயலாளர் சுவாமிநாதன், சித்துவம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பால்ராஜ் ஆகியோர் தலைமையில் மணல் அள்ள வந்த லாரிகளை விட மறுத்து மறியல் செய்தனர். இதனால் அங்கு வந்த நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டன.
இது குறி்த்து தகவல் அறிந்த விளாத்திகுளம் டிஎஸ்பி சாகுல் கமீது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனினும் அவர்கள் லாரிகளை விட மறுத்தனர். இதனால் மறியல் செய்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டிஎஸ்பி சாகுல் கமீது லாரிகளை விடாவிட்டால் அனைவரையும் சுட்டுத் தள்ளிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து போலீசார் மறியல் செய்த 25 பேரை கைது செய்து மாசார்பட்டியிலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதையறிந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மண்டபத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட 25 பேரும் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications