அத்வானியுடன் அன்னா ஹஸாரே சந்திப்பு-நாளை சோனியாவை சந்திக்கிறார்

நேற்றே சோனியாவை சந்திப்பதாக இருந்தார் அன்னா. ஆனால் அவர் மிகவும் பிசியாக இருப்பதாக கூறப்பட்டதால் சந்திப்பு நடைபெறவில்லை. இந்த நிலையில் இன்று பாஜக மூத்த தலைவர் அத்வானியை டெல்லியில் சந்தித்துப் பேசிய அன்னா, லோக்பால் மசோதா குறித்து விவரித்து ஆதரவு திரட்டினார்.
அதேபோல சிபிஐ பொதுச் செயலாளர் பர்தானையும் சந்தித்துப் பேசினார் அன்னா. அப்போது சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜாவும் உடன் இருந்தார். அத்வானியை அன்னா சந்தித்தபோது மூத்த பாஜக தலைவர்கள் உடன் இருந்தனர். அதேபோல அன்னாவுடன் கிரண் பேடி, அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.
நாளை சோனியாவுடன் சந்திப்பு
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாளை சந்திக்கவுள்ளார் அன்னா. அவர் நாளை மாலை 4 மணிக்கு வருமாறு சோனியா அலுவலகம் நேரம் ஒதுக்கி்க் கொடுத்துள்ளது. இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications