கனிமொழி, ராசாவுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும்: ஜஸ்வந்த் சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2ஜி வழக்கில் கைதாகி திஹார் சிறையில் உள்ள கனிமொழி எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
யாராவது கொலை, திருட்டு அல்லாத குற்றச்சாட்டுக்கு உள்ளானால் விசாரணை நடக்கையில் அவர்கள் சிறையில் அடைக்கப்படத் தேவையில்லை. ஏனென்றால் அவர்களுக்கு நிரந்தரமாக ஜாமீன் மறுக்க முடியாது.
ஜாமீன் என்பது குடிமக்களின் உரிமை. கனிமொழி எம்.பி., ஆ. ராசா ஆகியோருக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். பாஜகவின் கருத்தன்று. அவர்களை நிரந்தரமாக சிறையிலேயே வைக்க வேண்டும் என்று பாஜக கூறவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications